கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதிச் சுற்றில் முன்னணி வீரரான ரஃபேல் நடால் தோல்வியடைந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால் எதிர்கொண்டு விளையாடினார். 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போட்டியில் 7-6, 7-6, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் தீம் வெற்றி பெற்றுள்ளார். நாடலின் தோல்வி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும், செர்பியாவின் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.