உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மோதும் அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட்டுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வருகின்ற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள இந்த போட்டிக்கு இதுவரையில் 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில்,உலகக் கோப்பை கால்பந்து போட்டி லீக் சுற்றில் எந்த அணிகள்-யாருடன் மோதுவது என்பது குறித்து குலுக்கல் மூலம் (டிரா நிகழ்ச்சி) நேற்று முடிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றிரவு நடைபெற்றது.அப்போது,உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மோதும் அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில்,
குரூப் ஏ: கத்தார்,ஈக்வடார்,நெதர்லாந்து,செனகல் அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் பி: இங்கிலாந்து,ஈரான்,அமெரிக்கா, ஸ்காட்லாந்து,வேல்ஸ், உக்ரைன்.
குரூப் சி: அர்ஜென்டினா, சவுதி அரேபியா,மெக்சிகோ,போலந்து
குரூப் டி: பிரான்ஸ், யுஏஇ/ஆஸ்திரேலியா/பெரு, டென்மார்க், துனிசியா
குரூப் இ: ஸ்பெயின், கோஸ்டாரிகா/நியூசிலாந்து, ஜெர்மனி, ஜப்பான்
குரூப் எஃப்: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
குரூப் எச்: போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, உலக புகழ்பெற்ற வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமை தாங்கும் அர்ஜென்டினா அணி கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை 2022-ல் தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை எதிர்கொள்கிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி,தனது முதல் போட்டியில் கானாவை எதிர்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.